×

விபசாரம் நடத்திய கேரள வாலிபர் கைது

சேலம், ஜூன் 27: கேரள மாநிலம் திருவனந்தபுரம் களர்கோலம் பரவலவீடு பகுதியை சேர்ந்தவர் சுராஜ்(25). இவர் சேலம் பள்ளப்பட்டி பகுதியில் ஸ்பா சென்டர் நடத்தி வந்தார். இங்கு விபசாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் நேற்றுமுன்தினம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சென்னை, ஈரோடு, சேலத்தை சேர்ந்த 4இளம்பெண்கள் அங்கிருந்தனர். அவர்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சுராஜை போலீசார் கைது செய்ததுடன். 4 இளம்பெண்களையும் மீட்ட போலீசார் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்தனர்.

The post விபசாரம் நடத்திய கேரள வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Salem ,Suraj ,Kalarkolam Paravalavidu ,Thiruvananthapuram, Kerala ,Salem Pallapatti ,
× RELATED பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்துச்...